Sunday 3 July 2016

சுவாதி மரணமும் சுற்றி நிற்கும் கேள்விகளும்!



சுவாதி கொலை குறித்து நாம் இவ்வளவு ஆராய வேண்டிய அவசியம் இல்லை, ஆனால் இந்தக் கொலைப் பழியை எப்படியாவது இஸ்லாமியர்கள் மீது சாட்டி விட வேண்டும் என காவி பயங்கரவாதிகள் கடும் முயற்சி எடுத்த காரணத்தால் இதில் ஏதோ பூடாகம் இருக்கிறது என்ற கருத்தில் பல செய்திகளை ஆய்வு செய்யும் போது விடை தெரியாத பல கேள்விகள் வந்து நிற்கின்றது.

சில வருடங்களுக்கு முன்பு, மும்பை நகரில் ஒரு சேட்டுக் குடும்பத்தை அடியோடு கொலை செய்த கொலையாளிகள் அந்த மார்வாடியின் செல்போனை எடுத்துக் கொண்டு தலைமறைவாகி விட்டார்கள். உடனடியாக செல்போனை ஆய்வு செய்த காவல்துறை அது சுவிட்ச் ஆப் செய்யப்படாமல் பெங்களூர் NH சாலை டவர் ரேஞ்சுகளைக் காட்டியபடி சென்றதை டிரேஸ் செய்தனர். கடைசியில் சிமிண்ட் ஏற்றிச் சென்ற ஒரு லாரியை மடக்கி சோதனையிட்ட போது அந்த மார்வாடியின் செல்போன் மட்டும் சிமெண்ட் மூட்டைக்குள் கிடந்தது.

கொலையாளிகள் போலீஸை பெங்களூர் நோக்கி திசை திருப்பி விட்டு விட்டு இவர்கள் ஜாலியாக எதிர் திசையில் சூரத் நோக்கி பயணித்தார்கள். ஆனால் சாதாரண வாகன சோதனையில் சந்தேகத்தின் பேரில் மாட்டிக் கொண்டார்கள்.
ஆக இது ஒருவகை திசை திருப்பும் யுக்தி. இதுபோலத்தான் சுவாதி கொலையை பாரீஸ் கார்னரை நோக்கி திசை திருப்பி விட்ட காவி பயங்கரவாதிகள் தெற்கு நோக்கி நெல்லை வரை கொலைகாரனை எவ்வித பதட்டமும் இல்லாமல் தப்பிக்க விட்டுள்ளார்கள் என்பதை அறியலாம்.

அடுத்து.

Ø  சென்னைக்கு வந்து மூன்று மாதங்கள் மட்டும் ஆகிய ராம்குமார் சென்னையை படிக்கவே 6 மாதங்கள் ஆகும் நிலையில் அதுவும் புது இடத்தில் எதைப்பற்றியும் கவலைப்படாமல் எப்படி ஒரு கொலையை தனி ஆளாக செய்ய முடிந்தது? 3 மாதமாக வேலை தேடி வந்தார் என்று ஒரு கருத்தும், சினிமாவில் நடிக்க வந்தார் என்ற கருத்தும் நிலவுகின்றது. ஆனால் ராம்குமார் 3 மாதமாக சுவாதியை வேவு பார்க்க மட்டுமே வந்துள்ளார் என்று தான் கருத வேண்டியிருக்கிறது. அதற்காகத்தான் சுவாதி வீட்டு அருகில் உள்ள மேன்சனில் அறை எடுத்தும் தங்க வைக்கப்பட்டுள்ளார்.

Ø  சுவாதியின் தந்தை ரயில் நிலையத்தில் தன் மகளை இறக்கி விட்டதும் கொலை நடந்துள்ளது. கொலை நடந்த பிறகு கொலையாளி சரியாக சுவாதியின் செல்போனை மட்டும் எடுத்துச் சென்றுள்ளான். அவசர அவசரமாக கொலையைச் செய்தவன் அதே வேகத்தில் ஓடத்தான் நினைப்பான். ஆனால் ஆர அமர சுவாதியின் செல்போனை எடுத்துக் கொண்டு சாவகாசமாக அரிவாளை தண்டவாளத்தில் வீசிச் சென்றுள்ளதாக முதல் தகவல் அறிக்கை சொல்கிறது.

Ø  கள்ளக்காதலுக்காக மனைவி திட்டத்துடன் கணவனை கொலை செய்யும் பத்தினிகள் அதை கொலை சதியாக காட்டாமல் கொள்ளை நடந்தது போலவும் தடுக்க வந்த வீட்டுக்காரனை கொலை செய்தது போலவும் காட்ட வேண்டும் என்பதற்காக நகைகளை அள்ளி கள்ளக்காதலனிடம் கொடுத்து அனுப்பி விடுவார்கள். அதுபோல சுவாதியின் செல்போன் காணாமல் போனது இது காதலுக்காக நடந்த கொலை என்று திசை திருப்புவதற்காக முன்கூட்டியே ஏற்பாடு செய்யப்பட்டது போலத்தான் தெரிகின்றது.

Ø  இப்போது உள்ள சூழலில் தெய்வீகக் காதல் என்றெல்லாம் இல்லவே இல்லை. ஆனால் வெறும் 3 மாதத்தில் சுவாதியைக் காதலித்தேன் அவள் கிடைக்கவில்லை எனவே அவளைக் கொலை செய்தேன் என்று சொல்வது கேப்பையில் நெய்வடியும் ரகம். திரிஷா இல்லைன்னா திவ்யா என்றுதான் இன்றைய காதல் நகர்ந்து கொண்டிருக்கிறது. அதுமட்டுமின்றி சுவாதியைக் கொல்வதற்கு பயன்படுத்தப் பட்ட அரிவாள் அவசர கதியில் கொண்டு கீழே கிடந்து எடுத்த அரிவாள் அல்ல! இளநீர் கடையில் பேசிக் கொண்டிருக்கும் போது காதலை ஏற்க மறுத்த காதலியை இளநீர்க்கடை அரிவாளை எடுத்து வெட்டினால் அது எதார்த்தம். ஆனால் சுவாதியைக் கொலை செய்வதற்காகவே சிறப்பாக திருநெல்வேலி அரிவாளை பார்சல் செய்து கொண்டு வந்துள்ளான் ராம்குமார். ஆக இது முன்கூட்டியே திட்டமிடப்பட்ட பச்சைப் படுகொலை என்பதை சொல்லித்தான் தெரியவேண்டுமா?

Ø  தன் மகள் இறந்த செய்தியைக் கேட்டு சுவாதி குடும்பத்தினர் யாரும் அவ்வளவு பலமாக அழுதது போலத் தெரியவில்லை. அதுமட்டுமின்றி தன் மகளைக் கொன்றவனை கண்டுபிடிக்க என்ன ஒத்துழைப்பு வேண்டுமானாலும் காவல்துறைக்குத் தரத் தயார் என்று சொல்லும் பெற்றோர்களுக்கு மத்தியில் காவல்துறை எங்களைத் துன்புறுத்துகின்றார்கள் என்று முதல்வரின் தனிப்பிரிவில் புகார் கொடுத்த பெற்றோரை இப்போதுதான் முதலில் பார்க்கிறது சமூகம்.

Ø  பலமுறை குழுவாக சுவாதியின் பெற்றோரை விசாரிக்கச் சென்ற காவல்துறையினரை அவர்கள் கடைசிவரை மதிக்கவே இல்லை. இருந்தாலும் விடாப்பிடியாக காரியம் செய்வதற்கு திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் வரை அவர்களை விரட்டி வந்த காவல்துறையினரிடம் அவர்கள் கடைசிவரை ஒத்துழைப்பு கொடுக்கவே இல்லை. நமக்கு இருக்கும் அக்கறை கூட பெற்றோர்களுக்கு இல்லையே என அங்கிருந்த ஒரு போலீஸ்காரர் பத்திரிகையாளர்களிடம் சொல்லி வருத்தப்பட்டதாகவும் சமூக வலைத்தள செய்திகள் தெரிவிக்கின்றன.

Ø  சுவாதி கொலை செய்யப்பட்டவுடன் ஏற்கனவே தயாராக இருந்த ஒய்.ஜி.மகேந்திரன் உள்ளிட்ட காவி பயங்கரவாதிகள் பிலால் மாலிக் என்ற மிருகம் கொலை செய்து விட்டதாக பரப்பினார்கள். சுவாதியைக் கொன்றவன் அமைதி மார்க்கத்தைச் சேர்ந்தவன் என்று கல்யாணராமன் எழுதினான், இன்னு பல காவி பயங்கரவாதிகள் துலுக்க தேவ்டியா மகன் கொலை செய்து விட்டான் என்று எழுதினார்கள். ஆக சுவாதியைக் கொலை செய்யப்படுவது இவர்களுக்கு ஏற்கனவே நன்கு தெரியும்.

Ø  ஒரே பொய்யை திரும்பத் திரும்பச் சொன்னால் அது உண்மையாகி விடும் என்ற கோயபல்ஸ் தத்துவத்தின் படி கொலையை இவர்கள் ஆள் வைத்துச் செய்து விட்டு அப்பாவி பிலாலை மாட்டி விடப்பார்த்தார்கள். காவி பயங்கரவாதப் பத்திரிகை தினமலர் கூட இவர்களுடன் சேர்ந்து கொண்டு கொலையாளி ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவர் என பற்றவைத்தார்கள்.

Ø  அடுத்தது அந்தணர் முன்னேற்ற சங்கம். இவர்கள் சுவாதியின் பெற்றோரை சென்று பார்த்தார்கள். வெளியே வந்து பேட்டி கொடுக்கும் போது காதல் போன்ற தகாத வார்த்தைகளை இணைத்து சுவாதி குறித்து பரப்புவதால் சுவாதி பெற்றோர்கள் வேதனையடைகின்றார்கள் என்று சொன்னார்கள். ஆனால் அன்று மாலையே லவ்ஜிகாதை தடை செய் என்ற வாசகங்கள் அடங்கிய பேனரை வெளியிட்டார்கள்.

Ø  சுவாதி கொலையில் தொடர்புடையவர்களாகக் கருதப்பட்டவர்கள் இரண்டு பேர். ஒருவர் ஹிந்து, ஒருவர் முஸ்லிமாகிய பாரிமுனை முஹம்மது பிலால். கொலை நடந்த சில மணிநேரத்திற்குள் முதல் நண்பர்  ஸ்பாட்டுக்கு வந்து விட்டார். அப்போது தான் காவி பயங்கரவாதிகள் பிலாலை சிக்க வைக்க விதவிதமான ஸ்டேடஸ்களைப் பரப்பினார்கள்.

Ø  பிலாலை கஷ்டடியில் எடுத்து விசாரித்தது காவல்துறை. இதை பூடகமாக எழுதிய பூனுல் விகடன் பத்திரிகை அவர் நல்லவர் தான் ஆனால் அவர் குறிப்பிட்ட மதத்தின் சடங்கை தீவிரமாக பின்பற்றுகின்றார் என்று விசத்தீயை பற்ற வைத்தார்கள். குறிப்பிட்ட மதத்தின் சடங்கு என்றால் நோன்பு ஆகும். ஆனால் பிலாலை இறைவன் பாதுகாத்தான். பிலால் மீது எவ்வித குற்றமும் இல்லை என காவல்துறையினர் பிலாலை விடுவித்தார்கள்.

Ø  அதன்பிறகு தான் ராம்குமாரை கைது செய்தது காவல்துறை. ராம்குமார் உண்மையான குற்றவாளிதான். ஆனால் ராம்குமார் வெறும் அம்புதான் அவனை எய்தவர்கள் யார் என்பதுதான் இப்போதைய கேள்வி. ராம்குமார் சினிமா ஆசையில் சென்னைக்கு வந்ததாக சொல்லப்படுகின்றது. இந்த வழக்கில் சினிமா பிரபல காவி பயங்கரவாதிகள் ஒய்.ஜி.மகேந்திரா, எஸ்.வி.சேகர், மனோபாலா ஆகியோர் இருக்கிறார்கள். ஆக ராம்குமாருக்கு சினிமா ஆசை காட்டி சுவாதியைக் கொலை செய்ய ஏவியிருக்க வேண்டும் என்றே தோன்றுகின்றது. ஆக மேற்படி பயங்கரவாதிகளை குடைந்தால் உண்மை வெளியாகிவிடும்.

இப்போது இரண்டு கேள்விகள் எழும். சுவாதி ஏன் காவி பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டார்? கூலிப்படைய ஏவாமல் தனி ஆளாக ராம் குமார் ஏன் கொலை செய்ய வேண்டும்? வேறு என்ன? ஆணவக் கொலைதான். காரணம் சுவாதியுடன் பிலால் நல்ல நட்பில் இருப்பதை ஏற்கனவே காவி பயங்கரவாதிகள் அறிந்து வைத்திருக்கிறார்கள். அதனால் தான் சுவாதி கொலை செய்யப்பட்டவுடன் பிலால் பெயரை எளிமையாகப் பயன்படுத்தினார்கள்.

பிராமணப் பெண்கள் யாரையாவது மாற்று ஜாதிக்காரர்களை காதலித்தால் அவளுக்கு கொடுக்கப்படும் தண்டனையைப் பார்த்து மற்ற பிராமணப் பெண்கள் பயப்பட வேண்டும். பிராமணப் பெண்களைக் காதலிப்பவர்களை இவ்வாறு மாட்டி விட வேண்டும் என்பது தான் காவி பயங்கரவாதிகளின் திட்டம். அதனால் தான் தன் ஸ்டேட்டஸ்ஸை வாபஸ் பெற்ற ஒய்.ஜி மகேந்திரன் தன்னுடைய கருத்தில் மாற்றமில்லை என்று தெரிவித்தார். ஆக சுவாதி என்ற அப்பாவிப் பெண்ணை திட்டமிட்டே கருவறுத்து விட்டார்கள் காவி பயங்கரவாதிகள் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை.

மக்களே! காவி பயங்கரவாதிகளின் சதி வலையில் இருந்து மீண்டு ஹிந்து இஸ்லாமிய நல்லுறவைப் பேனுங்கள். நீங்களும் நாங்களும் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள். நீங்கள் ஒரு கொள்கையைப் பின்பற்றுகிறீர்கள், நாங்கள் ஒரு கொள்கையைப் பின்பற்றுகின்றோம் அது தான் நமக்குள் உள்ள வித்தியாசம். மற்றபடி நீங்களும் நாங்களும் சகோதர சகோதரிகளே! உங்கள் மீது எங்களுக்கு எவ்வித துவேசமும் இல்லை, அதுபோல எங்கள் மீதும் உங்களுக்கு எவ்வித துவேசமும் வேண்டாம். காவி பயங்கரவாதிகளை ஓட ஓட விரட்டுங்கள். தமிழகம் அமைதிப் பூங்காவாக திகழும்.

4 comments:

  1. https://m.facebook.com/story.php?story_fbid=1104534262967336&id=100002323181725

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. https://m.facebook.com/story.php?story_fbid=1104534262967336&id=100002323181725

    ReplyDelete