Tuesday 5 July 2016

அரசாங்கத்திற்காக நாளை கவுரவ நோன்பு!




இத்துனை காலமும் சிவகாசி காலண்டரையும் இறைச்சிக் கடைக்காரர்களையும் பார்த்து பெருநாள் அறிவித்து வந்த சுன்னத் ஜமாஅத்காரர்கள் இந்தியத் தொலைக்காட்சிகளில் முதன்முறையாக நபிவழி அடிப்படையில் பிறை தென்படாத காரணத்தைச் சொல்லி ரமலான் மாதத்தை 30 ஆக பூர்த்தி செய்துள்ளார்கள். பாராட்டத்தக்க விசயம்.
அதேநேரம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் குமரி மாவட்டம் தெங்கம்புதூரில் பிறை பார்க்கப்பட்டு உறுதிபடுத்தப்பட்டு நாளை பெருநாள் அறிவிக்கப்பட்டு விட்டது.

சரி தவ்ஹீத் ஜமாஅத் டீம், சுன்னத் ஜமாஅத் டீம். இந்த இரண்டு டீமில் யார் சொல்வது சரியான தகவல் என்பதை ஆராய்து பார்க்க வேண்டும். இந்த இரண்டி டீமிலும் பிறை பார்க்கும் கமிட்டி யாரிடம் உள்ளது? சுன்னத் ஜமாஅத்திடம் பிறைக் கமிட்டி உள்ளதா? இல்லை. தாம்பரத்தில் ஒரு சுன்னத் ஜமாஅத்காரர் பிறை பார்த்தால் அந்தத் தகவல் தங்கசாலையில் இருக்கும் பள்ளிவாசலுக்கு கூட போய் சேராது.

அதேநேரம் தவ்ஹீத் ஜமாஅத்தின் பிறை பார்க்கும் செட்டப் எவ்வாறு உள்ளது தெரியுமா? சரியான சங்கிலித் தொடர் கொண்ட பிறைபார்க்கும் செட்டப் கொண்ட ஒரே இயக்கம் இந்தியாவிலேயே தவ்ஹீத் ஜமாஅத்திடம் மட்டும் தான் உள்ளது. சென்னை முதல் குமரி வரை ஒவ்வொரு குக்கிராமங்களில் கூட தவ்ஹீத் ஜமாஅத்தின் உறுப்பினர்கள் குறிப்பிட்ட நாளில் பிறையைத் தேடுவார்கள்.

தவ்ஹீத் ஜமாஅத் தலைமையகத்தில் இதற்கென ஒரு பிறைக்கமிட்டி அமைக்கப்பட்டு 3 பேர் கொண்ட குழுவினர் இதற்காக நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். ஒவ்வொரு மாதமும் பிறையை இந்த கமிட்டி தான் அறிவிக்கும். பிறை பார்த்த தகவல் தருபவரின் நிலைப்பாட்டை உறுதி செய்த பின்னரே பிறை அறிவிக்கப்படும்.
அந்த அடிப்படையில் இன்றைக்கு குமரி மாவட்டத்தில் பிறை பார்த்து உறுதி படுத்திய பின்னர் பெருநாள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் வீம்பிலும் வீராப்பிலும் முறுக்கிக் கொண்டு திரியும் சுன்னத் ஜமாஅத்தினர் நாளை நோன்பு என்று அறிவித்துள்ளார்கள். இவர்கள் எங்கே பிறை தேடினார்கள்? எந்தெந்த ஊர்களில் பிறை பார்க்க ஆளை நியமித்தார்கள் என்பதைச் சொல்ல முடியுமா?

அதுமட்டுமின்றி நேற்று டெல்லியில் இருந்து பிறப்பிக்கப்பட்ட அரசானைப்படி நாளை 6/07/2016 அன்று அறிவிக்கப்பட்டிருந்த ரமலான் விடுமுறை ரத்து செய்யப்பட்டு அதற்கு மறுநாள் 7 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டதும் டவுன் ஹாஜி அவர்கள் பெருநாளை அறிவிக்காமல் போர்வைக்குள் ஒழிந்து கிடக்க ஒரு காரணம் என கூறப்படுகின்றது.
அல்லாஹ்வை பகைத்தாலும் பரவாயில்லை அரசாங்கத்தைப் பகைக்கூடாது என்ற நிலையை டவுன் ஹாஜி எடுத்த காரணத்தால் தான் பிறை அதிகாரப்பூர்வமாக தவ்ஹீத் ஜமாஅத்தினரால் அறிவிக்கப்பட்டும் தன் வாயில் பூட்டு போட்டு படுத்துக் கிடக்கிறார். இத்துனை காலமும் தவ்ஹீத் ஜமாஅத்தின் அறிவிப்பை ஏற்றுக் கொண்ட டவுன் ஹாஜி அவர்கள் இம்முறை அரசு இயந்திரத்துக்கு அடிபணிந்து மக்களை பாவக்குழிக்குள் தள்ளத் தயாராகி விட்டார்.

பிறை தெரிந்தது உறுதி செய்யபட்ட நிலையில் நாளை பெருநாள் என்பதும் உறுதியானதாகும். ஆனால் பெருநாள் அன்று நோன்பு நோற்று மக்களை தவறான வழியில் வழி நடத்தும் டவுன் ஹாஜியே! நீங்கள் மிகப்பெரிய சமுதாயப் பொருப்பாளர் என்பதை அல்லாஹ்வுக்கு பயந்து நினைவுகூறுங்கள்.


நாளை கவுரவ நோன்பு வைத்து மார்க்கத்திற்கு முரணான பாதையில் மக்களை செலுத்தாதீர்! அல்லாஹ்விற்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

எங்கள் கையிலும் ஊடகம்!

நாதுராம் கோட்சே என்ற காவி பயங்கரவாதி தேசத்தந்தை காந்தியைக் கொலை செய்து விட்டு அந்தப் பழியை இஸ்லாமியர்கள் மீது போட எத்தனித்த போது நாங்கள் நிரபராதிகள் என்று சொல்ல எங்களின் கைகளில் ஊடகம் இல்லை.
நவகாளியில் கொல்கத்தாவில் அஹமதாபாத்தில் இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே துவேசத்தைத் தூண்டி பெரிய கலவரத்தை உண்டாக்கிய போது எங்களின் கைகள் கட்டப்பட்டிருந்தன. நாங்கள் அப்பாவிகள் என்று சொல்ல எங்களின் கைகளில் ஊடகம் இல்லை.

எங்களுக்குச் சொந்தமான மசூதியை இடித்து தரை மட்டமாக்கி விட்டு அதற்கு எதிர் வினையாக எங்கள் மக்களின் மீதே கடுமையான கலவரத்தை இந்த காவி பயங்கரவாதிகள் உண்டாக்கினார்கள். பல நூறு முஸ்லிம்கள் கொலை செய்யப்பட்டார்கள். ஆனால் அந்தக் கொலைகள் எதுவுமே வெளியே தெரியாமல் மறைக்கப்பட்டது. இதையெல்லாம் சொல்வதற்கு அன்றைக்கு எங்களின் கைகளில் ஊடகம் இல்லை.

கோவையில் போலீஸ்காரர் செல்வராஜை கொலை செய்தவர்களை தண்டிக்காமல் ஒட்டு மொத்த இஸ்லாமியர்கள் மீது தாக்குதல் நடத்தி இஸ்லாமியர்களின் சொத்துக்களை சூறையாடி முஸ்லிம் இளைஞர்களை வேட்டாயாடி உணர்ச்சியைத் தூண்டி குண்டுகளை வெடிக்கச் செய்து அப்பாவி முஸ்லிம்களை தீவிரவாதிகளாக்கி ஒரு தாய் மக்களை எதிரிகளாக்கி கைக் கொட்டிச் சிரித்த காவி பயங்கரவாதிகளின் சதிச்செயலை மக்களுக்கு எடுத்துச் சொல்ல எங்களின் கைகளில் அன்றைக்கு ஊடகம் இல்லை நிராயுதபாணிகளாய் நின்றோம்.

சமர்பதி ரயிலின் எஸ்.6 வது பெட்டியின் நான்கு கதவுகளையும் உட்புறமாகத் தாழிட்டு உட்புறமாகத் தீவைத்து 59 கரசேவகர்களை அநியாயமாக எரித்து அந்தப் பழியை முஸ்லிம்களின் மீது போட்டு மூவாயிரத்திற்கும் மேற்பட்ட அப்பாவி முஸ்லிம்களை கதறக் கதற கொலை செய்து காவி பயங்கரவாதிகள் வெறியாட்டம் ஆடிய போது கோத்ரா ரயில் எரிப்பு திட்டமிட்ட சதி என்று சொல்ல எங்களிடம் ஊடகம் இல்லை, நாதியற்று நின்றோம்.

சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு, மாலேகான் குண்டுவெடிப்பு, அஜ்மீர் தர்ஹா குண்டுவெடிப்பை இந்திய ராணுவத்தில் இருந்த காவி பயங்கரவாதிகளின் உதவியுடன் நடத்தி விட்டு அந்தப் பழியையும் இஸ்லாமியர்களின் மீது போட்டு அதற்காக சில அப்பாவிகளை கைதும் செய்து அடைத்த போது அதைத் தட்டிக் கேட்க எங்களின் கைகளில் ஊடகங்கள் இல்லை திராணியற்று நின்றோம்.

இந்த குண்டுவெடிப்புகளையெல்லாம் துருவித்துருவி கண்டுபிடித்த நேர்மையான அதிகாரி ஹேமந்த் கர்கரேவை திட்டமிட்டே கொலை செய்ய மும்பைத் தாக்குதலை நடத்தி கர்கரேவை டார்கெட் செய்து கொலை செய்து இந்தத் தாக்குதலையும் முஸ்லிம்களின் மீது போட்ட காவி பயங்கரவாதிகளின் சதிச்செயலை நடுநிலை மக்களுக்கு எடுத்துச் சொல்ல எடுத்துச் செல்ல அன்றைக்கு எங்களின் கைகளில் ஊடகம் இல்லை.
அறிவியல் வளர்ச்சியிம் அற்புதத்தின் மூலம் சமூக வலைத்தளங்கள் ஸ்மார் போன்கள் வழியாக எங்கள் கைகளுக்கும் வந்தன…,

மாட்டுறைச்சி வைத்திருந்தார் என்ற அவதூறைப் பரப்பி அஹ்லாக் என்பவரை அடித்து கொல்லுங்கள் என்று அறிவிப்பு செய்து ஒரு அப்பாவி முதியவரை அடித்தே கொலை செய்த காவி பயங்கரவாதிகளின் செயலை எங்களால் தடுக்க முடியாவிட்டாலும் அதை மற்ற அயோக்கிய ஊடகங்கள் மறைத்தாலும் அதை அனைத்து மக்களுக்கும் எத்தி வைக்க எங்களின் கைகளில் ஊடகம் இருந்தது. காவி பயங்கரவாதிகளின் உண்மை முகம் மக்களுக்குத் தெரிந்தது.

கடுமையான மழையின் வெள்ளத்தால் சென்னை மாநகர் மூழ்கிய போது 30 ஆயிரம் களப்பணியாளர்களை தமிழகம் முழுவதிலும் இருந்து வரவழைத்து படகுகள் மூலம் மக்களைக் காத்து அவர்களுக்கு உணவளித்து மலை போலத் தேங்கிக் கிடந்த குப்பைகளை எவ்வித கவுரவமும் பார்க்காமல் தங்களின் கைகளால் அள்ளி அப்புறப் படுத்திய பட்டதாரிகள் உள்ளிட்ட சமூக நலச் சேவர்களை இயக்கிய ஒரு மாபெரும் இயக்கம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதன் தலைவர்களுக்கும் களப்பணி செய்த காட்சிகளை திட்டமிட்டே காவி ஊடகங்கள் மறைத்தன.

ஆனால் கிழிந்த டவுசர்கள் 4 பேர் கூட வராத வெள்ள நிவாரணப் பணியை தங்களின் எஜமானிய விசுவாசத்திற்காக 4000 டவுசர் தொண்டர்கள் களப்பணியாற்றினார்கள் என்ற பச்சைப் பொய்யைச் சொன்ன காவி மலர் பத்திரிகையால் தவ்ஹீத் ஜமாஅத் 30 ஆயிரம் பேர் பணியாற்றினார்கள் என்பதைச் சொல்ல முடியவில்லை. எந்த ஊடகக்காரனும் தவ்ஹீத் ஜமாஅத்தையும் மற்றைய அமைப்பு சாரா முஸ்லிம்களையும் தன்னார்வலர்கள் என்ற புனைப் பெயரில் அழைத்து மறைக்க, எங்களின் கைகளில் ஊடகம் இருந்தது. சமூக வலைத்தளங்கள் மூலம் இஸ்லாமியர்களின் அலப்பறிய உயிர்காக்கும் மனிதநேயப் பணியை பலம் கொண்டு பரப்பினோம். சகோதர மக்களிடத்தில் இத்துனை காலமும் எங்களைப் பற்றி ஏற்படுத்தப்பட்டிருந்த தவறான பிம்பம் உடைந்து நொருங்கியது.

அதுபோல..,

சுவாதியை கவுரவக் கொலை செய்து விட்டு அந்தப் பழியை ஒரு இஸ்லாமிய இளைஞன் நட்பு வைத்திருந்தார் என்ற ஒரே காரணத்திற்காக இஸ்லாமிய சமூகத்தின் மீதே வன்முறையை ஏவுவதற்காக லவ்ஜிகாத் என்ற பெயரைப் பயன்படுத்தி ஒரு மிகப் பெரிய கலவரத்தைத் தூண்டுவதற்கு திட்டமிட்டு சினிமா பயங்கரவாதிகள் மூலமாக விசமக் கருத்துக்களை தூவி ஒரு பெரிய கலவரத்தை உண்டாக்க முயற்சித்தார்கள். அதற்கு தினமலர் போன்ற சில காவி பயங்கரவாத ஊடகங்களையும் துணைக்கு அழைத்தார்கள்.

ஆனால் இறைவனின் மாபெரும் கிருபையால் இன்றைக்கு எங்களின் கைகளில் சமூக ஊடகங்கள் இருக்கின்றது. அதிமாகவே இருக்கின்றது. இந்த ஊடகத்தில் உள்ள ஒவ்வொருவரும் பத்திரிகையாளரே! இந்த ஊடகத்தில் உள்ள ஒவ்வொருவரும் ஆய்வாளரே! இந்த ஊடகத்தில் உள்ள ஒவ்வொருவரும் செய்தியாளரே! இந்த ஊடகத்தில் உள்ள ஒவ்வொருவரும் புலணாய்வு ஆய்வாளரே! அதனால் தான் சமூக ஊடகத்தின் கடுமையான எதிர்தாக்குதல்கள் மூலம் காவி பயங்கரவாதிகளின் சதித்திட்டம் சல்லி சல்லியாய் நொறுங்கியது. தமிழகம் ஒரு மிகப்பெரிய கலவரத்தில் இருந்து காக்கப்பட்டது.
இப்படி சில சமூக ஊடகங்களை எங்களின் கைகளில் கொடுத்து எங்களையும் பத்திரிகையாளராக்கிய இறைவனுக்கு நன்றி சொல்வோம்! அத்தோடு எங்கள் கருத்துக்களை உலகம் முழுவதும் எடுத்துச் செல்ல பேருதவி புரிந்த பேஸ்புக் நிறுவனம் மற்றும் வாட்ஸ் அப் நிறுவனங்களுக்கும் எங்களின் நன்றியை சேர்த்தே சொல்வோம்.

அஹ்மத்கபீரின் புதிய பக்கத்தை லைக் செய்ய:

www.facebook.com/%E0%AE%85%E0%AE%B9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AA%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-1653235638335702/?pnref=story

Sunday 3 July 2016

சுவாதி மரணமும் சுற்றி நிற்கும் கேள்விகளும்!



சுவாதி கொலை குறித்து நாம் இவ்வளவு ஆராய வேண்டிய அவசியம் இல்லை, ஆனால் இந்தக் கொலைப் பழியை எப்படியாவது இஸ்லாமியர்கள் மீது சாட்டி விட வேண்டும் என காவி பயங்கரவாதிகள் கடும் முயற்சி எடுத்த காரணத்தால் இதில் ஏதோ பூடாகம் இருக்கிறது என்ற கருத்தில் பல செய்திகளை ஆய்வு செய்யும் போது விடை தெரியாத பல கேள்விகள் வந்து நிற்கின்றது.

சில வருடங்களுக்கு முன்பு, மும்பை நகரில் ஒரு சேட்டுக் குடும்பத்தை அடியோடு கொலை செய்த கொலையாளிகள் அந்த மார்வாடியின் செல்போனை எடுத்துக் கொண்டு தலைமறைவாகி விட்டார்கள். உடனடியாக செல்போனை ஆய்வு செய்த காவல்துறை அது சுவிட்ச் ஆப் செய்யப்படாமல் பெங்களூர் NH சாலை டவர் ரேஞ்சுகளைக் காட்டியபடி சென்றதை டிரேஸ் செய்தனர். கடைசியில் சிமிண்ட் ஏற்றிச் சென்ற ஒரு லாரியை மடக்கி சோதனையிட்ட போது அந்த மார்வாடியின் செல்போன் மட்டும் சிமெண்ட் மூட்டைக்குள் கிடந்தது.

கொலையாளிகள் போலீஸை பெங்களூர் நோக்கி திசை திருப்பி விட்டு விட்டு இவர்கள் ஜாலியாக எதிர் திசையில் சூரத் நோக்கி பயணித்தார்கள். ஆனால் சாதாரண வாகன சோதனையில் சந்தேகத்தின் பேரில் மாட்டிக் கொண்டார்கள்.
ஆக இது ஒருவகை திசை திருப்பும் யுக்தி. இதுபோலத்தான் சுவாதி கொலையை பாரீஸ் கார்னரை நோக்கி திசை திருப்பி விட்ட காவி பயங்கரவாதிகள் தெற்கு நோக்கி நெல்லை வரை கொலைகாரனை எவ்வித பதட்டமும் இல்லாமல் தப்பிக்க விட்டுள்ளார்கள் என்பதை அறியலாம்.

அடுத்து.

Ø  சென்னைக்கு வந்து மூன்று மாதங்கள் மட்டும் ஆகிய ராம்குமார் சென்னையை படிக்கவே 6 மாதங்கள் ஆகும் நிலையில் அதுவும் புது இடத்தில் எதைப்பற்றியும் கவலைப்படாமல் எப்படி ஒரு கொலையை தனி ஆளாக செய்ய முடிந்தது? 3 மாதமாக வேலை தேடி வந்தார் என்று ஒரு கருத்தும், சினிமாவில் நடிக்க வந்தார் என்ற கருத்தும் நிலவுகின்றது. ஆனால் ராம்குமார் 3 மாதமாக சுவாதியை வேவு பார்க்க மட்டுமே வந்துள்ளார் என்று தான் கருத வேண்டியிருக்கிறது. அதற்காகத்தான் சுவாதி வீட்டு அருகில் உள்ள மேன்சனில் அறை எடுத்தும் தங்க வைக்கப்பட்டுள்ளார்.

Ø  சுவாதியின் தந்தை ரயில் நிலையத்தில் தன் மகளை இறக்கி விட்டதும் கொலை நடந்துள்ளது. கொலை நடந்த பிறகு கொலையாளி சரியாக சுவாதியின் செல்போனை மட்டும் எடுத்துச் சென்றுள்ளான். அவசர அவசரமாக கொலையைச் செய்தவன் அதே வேகத்தில் ஓடத்தான் நினைப்பான். ஆனால் ஆர அமர சுவாதியின் செல்போனை எடுத்துக் கொண்டு சாவகாசமாக அரிவாளை தண்டவாளத்தில் வீசிச் சென்றுள்ளதாக முதல் தகவல் அறிக்கை சொல்கிறது.

Ø  கள்ளக்காதலுக்காக மனைவி திட்டத்துடன் கணவனை கொலை செய்யும் பத்தினிகள் அதை கொலை சதியாக காட்டாமல் கொள்ளை நடந்தது போலவும் தடுக்க வந்த வீட்டுக்காரனை கொலை செய்தது போலவும் காட்ட வேண்டும் என்பதற்காக நகைகளை அள்ளி கள்ளக்காதலனிடம் கொடுத்து அனுப்பி விடுவார்கள். அதுபோல சுவாதியின் செல்போன் காணாமல் போனது இது காதலுக்காக நடந்த கொலை என்று திசை திருப்புவதற்காக முன்கூட்டியே ஏற்பாடு செய்யப்பட்டது போலத்தான் தெரிகின்றது.

Ø  இப்போது உள்ள சூழலில் தெய்வீகக் காதல் என்றெல்லாம் இல்லவே இல்லை. ஆனால் வெறும் 3 மாதத்தில் சுவாதியைக் காதலித்தேன் அவள் கிடைக்கவில்லை எனவே அவளைக் கொலை செய்தேன் என்று சொல்வது கேப்பையில் நெய்வடியும் ரகம். திரிஷா இல்லைன்னா திவ்யா என்றுதான் இன்றைய காதல் நகர்ந்து கொண்டிருக்கிறது. அதுமட்டுமின்றி சுவாதியைக் கொல்வதற்கு பயன்படுத்தப் பட்ட அரிவாள் அவசர கதியில் கொண்டு கீழே கிடந்து எடுத்த அரிவாள் அல்ல! இளநீர் கடையில் பேசிக் கொண்டிருக்கும் போது காதலை ஏற்க மறுத்த காதலியை இளநீர்க்கடை அரிவாளை எடுத்து வெட்டினால் அது எதார்த்தம். ஆனால் சுவாதியைக் கொலை செய்வதற்காகவே சிறப்பாக திருநெல்வேலி அரிவாளை பார்சல் செய்து கொண்டு வந்துள்ளான் ராம்குமார். ஆக இது முன்கூட்டியே திட்டமிடப்பட்ட பச்சைப் படுகொலை என்பதை சொல்லித்தான் தெரியவேண்டுமா?

Ø  தன் மகள் இறந்த செய்தியைக் கேட்டு சுவாதி குடும்பத்தினர் யாரும் அவ்வளவு பலமாக அழுதது போலத் தெரியவில்லை. அதுமட்டுமின்றி தன் மகளைக் கொன்றவனை கண்டுபிடிக்க என்ன ஒத்துழைப்பு வேண்டுமானாலும் காவல்துறைக்குத் தரத் தயார் என்று சொல்லும் பெற்றோர்களுக்கு மத்தியில் காவல்துறை எங்களைத் துன்புறுத்துகின்றார்கள் என்று முதல்வரின் தனிப்பிரிவில் புகார் கொடுத்த பெற்றோரை இப்போதுதான் முதலில் பார்க்கிறது சமூகம்.

Ø  பலமுறை குழுவாக சுவாதியின் பெற்றோரை விசாரிக்கச் சென்ற காவல்துறையினரை அவர்கள் கடைசிவரை மதிக்கவே இல்லை. இருந்தாலும் விடாப்பிடியாக காரியம் செய்வதற்கு திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் வரை அவர்களை விரட்டி வந்த காவல்துறையினரிடம் அவர்கள் கடைசிவரை ஒத்துழைப்பு கொடுக்கவே இல்லை. நமக்கு இருக்கும் அக்கறை கூட பெற்றோர்களுக்கு இல்லையே என அங்கிருந்த ஒரு போலீஸ்காரர் பத்திரிகையாளர்களிடம் சொல்லி வருத்தப்பட்டதாகவும் சமூக வலைத்தள செய்திகள் தெரிவிக்கின்றன.

Ø  சுவாதி கொலை செய்யப்பட்டவுடன் ஏற்கனவே தயாராக இருந்த ஒய்.ஜி.மகேந்திரன் உள்ளிட்ட காவி பயங்கரவாதிகள் பிலால் மாலிக் என்ற மிருகம் கொலை செய்து விட்டதாக பரப்பினார்கள். சுவாதியைக் கொன்றவன் அமைதி மார்க்கத்தைச் சேர்ந்தவன் என்று கல்யாணராமன் எழுதினான், இன்னு பல காவி பயங்கரவாதிகள் துலுக்க தேவ்டியா மகன் கொலை செய்து விட்டான் என்று எழுதினார்கள். ஆக சுவாதியைக் கொலை செய்யப்படுவது இவர்களுக்கு ஏற்கனவே நன்கு தெரியும்.

Ø  ஒரே பொய்யை திரும்பத் திரும்பச் சொன்னால் அது உண்மையாகி விடும் என்ற கோயபல்ஸ் தத்துவத்தின் படி கொலையை இவர்கள் ஆள் வைத்துச் செய்து விட்டு அப்பாவி பிலாலை மாட்டி விடப்பார்த்தார்கள். காவி பயங்கரவாதப் பத்திரிகை தினமலர் கூட இவர்களுடன் சேர்ந்து கொண்டு கொலையாளி ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவர் என பற்றவைத்தார்கள்.

Ø  அடுத்தது அந்தணர் முன்னேற்ற சங்கம். இவர்கள் சுவாதியின் பெற்றோரை சென்று பார்த்தார்கள். வெளியே வந்து பேட்டி கொடுக்கும் போது காதல் போன்ற தகாத வார்த்தைகளை இணைத்து சுவாதி குறித்து பரப்புவதால் சுவாதி பெற்றோர்கள் வேதனையடைகின்றார்கள் என்று சொன்னார்கள். ஆனால் அன்று மாலையே லவ்ஜிகாதை தடை செய் என்ற வாசகங்கள் அடங்கிய பேனரை வெளியிட்டார்கள்.

Ø  சுவாதி கொலையில் தொடர்புடையவர்களாகக் கருதப்பட்டவர்கள் இரண்டு பேர். ஒருவர் ஹிந்து, ஒருவர் முஸ்லிமாகிய பாரிமுனை முஹம்மது பிலால். கொலை நடந்த சில மணிநேரத்திற்குள் முதல் நண்பர்  ஸ்பாட்டுக்கு வந்து விட்டார். அப்போது தான் காவி பயங்கரவாதிகள் பிலாலை சிக்க வைக்க விதவிதமான ஸ்டேடஸ்களைப் பரப்பினார்கள்.

Ø  பிலாலை கஷ்டடியில் எடுத்து விசாரித்தது காவல்துறை. இதை பூடகமாக எழுதிய பூனுல் விகடன் பத்திரிகை அவர் நல்லவர் தான் ஆனால் அவர் குறிப்பிட்ட மதத்தின் சடங்கை தீவிரமாக பின்பற்றுகின்றார் என்று விசத்தீயை பற்ற வைத்தார்கள். குறிப்பிட்ட மதத்தின் சடங்கு என்றால் நோன்பு ஆகும். ஆனால் பிலாலை இறைவன் பாதுகாத்தான். பிலால் மீது எவ்வித குற்றமும் இல்லை என காவல்துறையினர் பிலாலை விடுவித்தார்கள்.

Ø  அதன்பிறகு தான் ராம்குமாரை கைது செய்தது காவல்துறை. ராம்குமார் உண்மையான குற்றவாளிதான். ஆனால் ராம்குமார் வெறும் அம்புதான் அவனை எய்தவர்கள் யார் என்பதுதான் இப்போதைய கேள்வி. ராம்குமார் சினிமா ஆசையில் சென்னைக்கு வந்ததாக சொல்லப்படுகின்றது. இந்த வழக்கில் சினிமா பிரபல காவி பயங்கரவாதிகள் ஒய்.ஜி.மகேந்திரா, எஸ்.வி.சேகர், மனோபாலா ஆகியோர் இருக்கிறார்கள். ஆக ராம்குமாருக்கு சினிமா ஆசை காட்டி சுவாதியைக் கொலை செய்ய ஏவியிருக்க வேண்டும் என்றே தோன்றுகின்றது. ஆக மேற்படி பயங்கரவாதிகளை குடைந்தால் உண்மை வெளியாகிவிடும்.

இப்போது இரண்டு கேள்விகள் எழும். சுவாதி ஏன் காவி பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டார்? கூலிப்படைய ஏவாமல் தனி ஆளாக ராம் குமார் ஏன் கொலை செய்ய வேண்டும்? வேறு என்ன? ஆணவக் கொலைதான். காரணம் சுவாதியுடன் பிலால் நல்ல நட்பில் இருப்பதை ஏற்கனவே காவி பயங்கரவாதிகள் அறிந்து வைத்திருக்கிறார்கள். அதனால் தான் சுவாதி கொலை செய்யப்பட்டவுடன் பிலால் பெயரை எளிமையாகப் பயன்படுத்தினார்கள்.

பிராமணப் பெண்கள் யாரையாவது மாற்று ஜாதிக்காரர்களை காதலித்தால் அவளுக்கு கொடுக்கப்படும் தண்டனையைப் பார்த்து மற்ற பிராமணப் பெண்கள் பயப்பட வேண்டும். பிராமணப் பெண்களைக் காதலிப்பவர்களை இவ்வாறு மாட்டி விட வேண்டும் என்பது தான் காவி பயங்கரவாதிகளின் திட்டம். அதனால் தான் தன் ஸ்டேட்டஸ்ஸை வாபஸ் பெற்ற ஒய்.ஜி மகேந்திரன் தன்னுடைய கருத்தில் மாற்றமில்லை என்று தெரிவித்தார். ஆக சுவாதி என்ற அப்பாவிப் பெண்ணை திட்டமிட்டே கருவறுத்து விட்டார்கள் காவி பயங்கரவாதிகள் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை.

மக்களே! காவி பயங்கரவாதிகளின் சதி வலையில் இருந்து மீண்டு ஹிந்து இஸ்லாமிய நல்லுறவைப் பேனுங்கள். நீங்களும் நாங்களும் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள். நீங்கள் ஒரு கொள்கையைப் பின்பற்றுகிறீர்கள், நாங்கள் ஒரு கொள்கையைப் பின்பற்றுகின்றோம் அது தான் நமக்குள் உள்ள வித்தியாசம். மற்றபடி நீங்களும் நாங்களும் சகோதர சகோதரிகளே! உங்கள் மீது எங்களுக்கு எவ்வித துவேசமும் இல்லை, அதுபோல எங்கள் மீதும் உங்களுக்கு எவ்வித துவேசமும் வேண்டாம். காவி பயங்கரவாதிகளை ஓட ஓட விரட்டுங்கள். தமிழகம் அமைதிப் பூங்காவாக திகழும்.

Saturday 2 July 2016

பழியைச் சுமந்தே பழகிய சமுதாயம்!


நுங்கம்பாக்கத்தில் சுவாதி கொலை செய்யப்பட்டவுடன் காவி பயங்கரவாத அயோக்கியர்கள் கொலை செய்த கொலைகாரனை பிடித்து அவனை தண்டிக்க வேண்டும் என்று ஆர்வம் காட்டியதை விட இந்த கொலைச் சம்பவத்தை திசைமாற்றி இஸ்லாமியர்கள் மீது கலவரத்தை ஏவி விட்டு விட வேண்டும் என்பதிலேயே கண்ணும் கருத்துமாக இருந்தார்கள்.

அதனால் தான் காவி பயங்கரவாதிகள் ஒய்.ஜி. மகேந்திரன் மற்றும் எஸ்.வி சேகர் போன்ற அயோக்கியர்கள் வெளிப்படையாகவே இதை லவ் ஜிகாத் என்றும், சுவாதியைக் கொலை செய்தவன் பெயர் பிலால் மாலிக் என்றும் திட்டமிட்டே பரப்பினார்கள். சுவாதி பெற்றோர்களைச் சந்தித்து விட்டு வெளியே வந்த அந்தணர் முன்னேற்ற சங்கத்தினர் சுவாதி குறித்து தவறானை அவதூறுகளைப் பரப்பாதீர்கள், அது அவர்களின் பெற்றோர்களை ரொம்பவும் பாதிக்கிறது என்று பேட்டியளித்தார்கள். ஆனால் அன்றைக்கு சாயங்காலமே லவ்ஜிகாத்தை தடுத்திடு என்ற வாசகங்கள் அடங்கிய போஸ்டரை அந்தணர் முன்னேற்ற சங்கம் சார்பாக வெளியிட்டனர்.

ஆக இவர்களையெல்லாம் இயக்கியவர்கள் காவி பயங்கரவாதிகள் என்பதை மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். சுவாதியைக் கொலை செய்த கொலைகாரனை பிடிப்பது அவர்களின் நோக்கம் அல்ல! மாறாக இந்த சாக்கை வைத்து அப்பாவி முஸ்லிம்களின் மீது கலவரத்தை ஏவிவிட்டு அந்த இரண்டு தரப்பு மக்கள் அடித்துக் கொள்வதைக் கண்டு உள்ளம் குளிர வேண்டும் என்பதே காவி பயங்கரவாதிகளின் நோக்கம்.

காந்தியைக் கொலை செய்து விட்டு முஸ்லிம்களின் மீது பழியைஒப் போட்டது போல, மாலேகானின் குண்டை வெடிக்கச் செய்து விட்டு முஸ்லிம்கள் மீது பழியைப் போட்டது போல, அஜ்மீர், சம்ஜோதா இன்னும் பலபல குண்டுவெடிப்புகளை நடத்தி அந்தப் பழியை முஸ்லிம்கள் மீது போட்ட காவி பயங்கரவாதிகள் இந்தக் கொலையையும் முஸ்லிம்கள் மீது போட்டு ஒரு பாரிய கலவரத்தை தூண்ட தயாராகினார்கள்.

கோவையில் காவலர் செல்வராஜ் கொலை செய்யப்பட்ட போதும் காவி பயங்கரவாதிகள் இதே யுக்தியைத்தான் கையாண்டார்கள். அந்தக் கொலைக்கு துளியும் தொடர்பில்லாத 19 முஸ்லிம் இளைஞர்களை அடித்தே கொன்றார்கள். அதன்மூலம் பாரிய கலவரம் அதன்பிறகு பெரிய குண்டு வெடிப்பு இதுதான் காவி பயங்கரவாதிகளின் ராஜதந்திர வேலை.

அன்றைக்கு இருந்த திமுக ஆட்சி கலைஞர் கருணாநிதியின் ஆசியுடன் வேலை பார்த்த காவி காவலர்கள் பல நூறு அப்பாவி முஸ்லிம்களை கைது செய்து சிறையில் அடைத்தார்கள். அவர்களின் பல பேர் இன்னமும் குற்றவாளிகள் என்று நிறுபிக்கப் படாமலேயே சிறையில் கிடக்கிறார்கள் பாவம்.

இதே நிலை சுவாதி கொலையிலும் வந்து விடும் என்று தான் காவி பயங்கரவாதிகள் திட்டமிட்டார்கள். ஒருவேளை இந்த ஆட்சி கருணாநிதியின் ஆட்சியாக இருந்திருந்தால் இந்நேரம் பல நூறு முஸ்லிம்கள் பிலால் மாலிக் என்ற பெயரில் சிறையில் தள்ளப்பட்டிருப்பார்கள். விஸ்வரூபம் திரைப்படத்திற்கு ஆளும் அரசு தடை போட்ட போது அதில் நரி வேலை செய்து அந்தப் படத்தை வெளியாக்கியவர் கருணாநிதி. இஸ்லாமியர்களின் முதுகில் தொடர்ந்து குத்துபவர் கருணாநிதி.

ஆனால் ஜெயலலிதா அவர்கள் எவ்வளவோ மேல். விஸ்வரூபம் திரைப்படம் இஸ்லாமியர்களை பாதிக்கும் என்று தெரிந்தே அதற்கு தடை விதித்தார்கள். முஸ்லிம் அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களோடு சுமூக உடன்பாட்டுக்கு வாருங்கள் என்று க’மல ஹாசனை விரட்டியடித்தார்கள். காவிக்கைக்கூலி க’மலஹாசன் முஸ்லிம்களிடம் பணிந்து போனாலும் கருணாநிதியின் நரித்தந்திரத்தால் படம் வெளியாகியது.

இதோ இன்றைக்கு பிலால் மாலிக்கை நோக்கி பிரச்சினை திசை திருப்பப்பட்டிருந்தால் ஒருவேளை இது கருணா ஆட்சியின் காவல்துறையாக இருந்தால் இந்நேரம் பல பிலால் மாலிக்குகள் கைது செய்யப்பட்டிருப்பார்கள். ஒருவேளை உண்மையான குற்றவாளிகள் கிடைக்காத பட்சத்தில் பல ஆண்டுகள் விசாரனைக் கைதியாகவே இருந்திருப்பார்கள்.
ஆனால் தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் விசாரனையை திசை திருப்பும் காவி பயங்கரவாதிகளின் ஓலங்களை செவியேற்காமல் தாமதமானாலும் பரவாயில்லை உண்மையான குற்றவாளிகளை கைது செய்யுங்கள் என தன்னுடைய அமைச்சுப் பணியின் கீழ் பணியாற்றும் காவல்துறைக்கு உத்தவிட்டதன் பலன், இன்றைக்கு உண்மையான குற்றவாளி கண்டுபிடிக்கப்பட்டுப் பட்டு ஒட்டு மொத்த இஸ்லாமிய சமுதாயமும் காக்கப்பட்டிருக்கின்றது.

இந்த நற்பனியைச் செய்த தமிழக முதல்வர் அவர்கள் இன்னொரு காரியத்தையும் செய்தால் இஸ்லாமியர்கள் மட்டுமின்றி பல நடுநிலை ஹிந்துச் சகோதரர்கள் கூட மகிழ்ச்சியடைவார்கள். இஸ்லாமிய சமூகத்தின் மீது அவதூறைப் பரப்பி கலவரத்தை உண்டாக்கத் துணிந்த காவி பயங்கரவாதிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன் மூலம் இனி எவனும் தேவையில்லாத அவதூறை இஸ்லாமிய சமூகத்தின் மீதோ அல்லது வேறு சமுதாயத்தின் மீதோ சாட்டி கலவரத்தைத் தூண்டாமல் இருக்கும் படி செய்ய வேண்டும்.

இத்துனை காலமும் முதல்வர் ஜெயலலிதாவை அம்மா என்று மற்றவர்கள் அழைத்தார்கள். அது உள்ளார்ந்த அன்போ பாசமோ தெரியாது. ஆனால் இன்றைக்கு ஒரு பெரிய கொடும் பழியில் இருந்து இஸ்லாமிய சமூகத்தைக் காத்து இரண்டு சமுதாய மக்களிடையே நல்லிணக்கம் ஏற்படக் காரணமாய் இருந்த தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு இஸ்லாமிய சமூகம் சார்பாக நான் உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நன்றி அம்மா!

புதிய பாதை! புதிய பயணம்!



அஸ்ஸலாமு அலைக்கும் அன்புச் சகோதரர்களே!

சத்தியப் பிரச்சாரத்தை எதிர் கொள்ளத் திரானியற்ற கோழைகள் என்னுடைய பேஸ்புக் பக்கத்தை அடிக்கடி முடக்கி வரும் காரணத்தால் நமது கருத்துக்கள் எந்த நிலையிலும் நின்று விடக் கூடாது என்பதற்காக இன்று முதல் பிளாக்கரிலும் எழுத இருக்கிறேன். சகோதரர்கள் என் முகநூல் ஐடி முடக்கப்பட்டாலும் இந்த பிளாக்கர் மூலமாக செய்திகளை அறிந்து அதை காப்பி ஷேர் செய்தும் ஒத்துழைப்புத் தருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

உங்கள் அன்புச் சகோதரன்
இ.அஹ்மத் கபீர்.